ஜூன் 29 முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல் – ஜூலை 1 முதல் புதிய கட்டுப்பாடுகள்!
கேரளா மாநிலத்தில் கொரோனா புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை இன்னும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்
நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை பரவல் தீவிரமடைந்து வந்ததை தொடர்ந்து, கேரளா மாநிலத்தில் கடந்த மே மாத துவக்கத்தில் இருந்து முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில் மாநிலம் முழுவதும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த முழு ஊரடங்கு உத்தரவானது நேற்று (ஜூன் 29) முதல் மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்படுவதாக முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையில் கேரளாவில் தற்போது விதிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கில் இருந்து சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு – புதிய டிஜிபி சைலேந்திரபாபு!
அதாவது மாநிலம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளை நான்கு பிரிவாக பிரித்து, கொரோனா பாதிப்பு விகிதம் 6 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள பகுதிகளை A பிரிவிலும், 6 -12 சதவீதம் பாதிப்புகள் உள்ள பகுதிகள் B பிரிவிலும், 12-18 சதவீதம் பாதிப்புகள் உள்ள பகுதிகள் C பிரிவிலும், 18 சதவீதத்திற்கு மேல் பாதிப்புகள் உள்ள பகுதிகள் D பிரிவாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. தவிர மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பகுதிகளுக்கும் சில கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் சுகாதார நிலைமையை சீர்படுத்த ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இந்த நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட மாட்டாது – அமைச்சர் விளக்கம்!
இதற்கிடையில் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் புதிய விதிகளை அமல்படுத்தும் போது, கொரோனவால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் உடல்களை ஒரு மணி நேரத்திற்குள் இறுதி மரியாதை செலுத்தவும், மத சடங்குகளை செய்வதற்கும் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 40% பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 12 % பேர் இரண்டாவது தடுப்பூசியையும் செலுத்தியுள்ளனர். தவிர பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.