புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – விநியோகம் தொடக்கம்!
தமிழகம் முழுவதும் இதுவரைக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சேலம் மாவட்டத்திற்கு மட்டும் தற்போது 3,482 புது ரேஷன் கார்டுகள் விநியோகம் செய்யப்படவுள்ளன.
புதிய ரேஷன் கார்டு:
தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் மூலமாக பல லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் அரிசி, பருப்பு, கோதுமை முதலான அன்றாட தேவை பொருட்களை மலிவு விலையில் வாங்கி பயனடைந்து வருகின்றனர். ரேஷன் அட்டைகள் இந்த ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு மட்டுமல்லாமல் அரசின் அனைத்து நல திட்டங்களையும் பெறுவதற்கும் மிகவும் அவசியமான ஒன்றாகிவிட்டது. ஒருவரின் குடும்ப வருமானத்தை அடிப்படையாக வைத்து ரேஷன் அட்டைகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
விஜய் டிவி “குக் வித் கோமாளி” ஷிவாங்கி செய்த காரியம் – ஹேட்டர்களுக்கு பதிலடி!
PHH, PHH – AYY, NPHH, NPHH – NC என பல தரப்புடைய ரேஷன் கார்டுகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியா முழுவதும் வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்களை கருத்தில் கொண்டு ”ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” என்கிற திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலமாக ரேஷன் கார்டுதாரர்கள் எந்த மாநிலத்தில் இருந்தாலும் கூட அருகிலுள்ள ரேஷன் கடைகளிலேயே ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது புதிதாக ரேஷன் கார்டுகள் மக்களுக்கு வழங்கப்படும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி இது வரைக்கும் தமிழகத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான அட்டைதாரர்களுக்கு புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் மட்டுமே ஜூன் மாதத்தில் 3,482 புது ரேஷன் கார்டுகள் வந்துள்ளன. அந்த புது ரேஷன் கார்டுகள் அனைத்தையும் சேலம் தாலுகாவுக்கு 506, மேட்டூர் 378, ஓமலுார் 362, சேலம் மேற்கு பகுதிக்கு 338, சேலம் தெற்கு பகுதிக்கு 287, ஏற்காடு 31 ரேஷன் கார்டுகள் என பிரித்து அனுப்பப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் மட்டுமே 14, 614 ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்கள் அந்தந்த தாலுகாவுக்கு சென்று இலவசமாகவே ரேஷன் அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம்.