ஆதார் கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு – UIDAI அதிரடி அறிவிப்பு!
இந்திய அரசால் வழங்கப்படும் முக்கிய அடையாளமான ஆதார் அட்டை போலியாக உள்ளதா என சரிபார்க்க புதிய வழிமுறையை அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் பல குற்ற சம்பவங்கள் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதார் அட்டை:
இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனின் தனித்துவமான அடையாளமாக ஆதார் விளங்குகிறது. இன்றைய நடைமுறையில் கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை அனைத்து இடங்களிலும் ஆதார் அடையாள அட்டை தேவைப்படுகிறது. இந்நிலையில் ஆதார் அட்டைகளை போலியாக தயாரித்து பல மோசமான குற்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனை ஒழித்து கட்டும் வகையில் 6 லட்சம் ஆதார் அட்டைகளை UIDAI ரத்து செய்துள்ளது. மேலும் இது குறித்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மழைக்கால கூட்டத்தொடரில் தெரிவித்தார்.
Exams Daily Mobile App Download
இந்த மாதிரியான குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக ஆதார் அட்டையில் கூடுதல் சரிபார்ப்பு அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது இதற்கு முன்பு கருவிழி, கைரேகை போன்றவை அடையாளமாக இருந்த நிலையில் தற்போது முகத்தின் முழு புகைப்படமும் அடையாளமாக சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போலியான ஆதார் கார்டுகளை எளிதில் கண்டுபிடிக்க முடியும். மேலும் பல குற்ற சம்பவங்கள் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நமது ஆதார் எண் உண்மையானதா அல்லது போலியானதா என்பதை சரிபார்க்க சில வழிமுறைகள் உள்ளன. அந்த வழிமுறைகளை பற்றி கீழே காண்போம்.
1.உங்களிடம் உள்ள ஆதார் போலியானதா அல்லது சரியானதா என்பதை கண்டுபிடிக்க UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். (https://resident.uidai.gov.
2.இதற்கு பிறகு ஆதார் சரிபார்ப்பு சேவை (Aadhaar Verify) விருப்பத்தை தேர்வு செய்யலாம். இல்லையெனில் ஆதார் நம்பகத்தன்மையை சரிபார்க்க நீங்கள் நேரடியாக https://myaadhaar.uidai.gov.
TNPSC குரூப் 2 & 2A தேர்வு முடிவுகள் 2022 – முக்கிய அறிவிப்பு
3. இதனையடுத்து 12 இலக்க ஆதார் எண் அல்லது 16 இலக்க மெய்நிகர் ஐடியை உள்ளிடவும்.
4. எண்ணை உள்ளிட்டு முடித்ததும், திரையில் காட்டப்படும் பாதுகாப்புக்குறியீட்டை டைப் செய்து, ஒன் டைம் பாஸ்வேர்ட் எனப்படும் OTP-யை கோரவும்.
5. கொடுக்கப்பட்ட ஆதார் எண் அல்லது விர்ச்சுவல் ஐடிக்கான OTP ஐ உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறுவீர்கள். தற்போது இணையதளத்தில் OTPயை உள்ளிடவும்.
6. தற்போது நீங்கள் மற்றொரு பக்கத்திற்கு செல்வீர்கள். அங்கு உங்கள் ஆதார் எண் செல்லுபடியாகுமா? இல்லையா? என்று ஒரு செய்தியைப் பெறலாம்.
7. செய்தியுடன், பெயர், மாநிலம், வயது, பாலினம் மற்றும் பிற விவரங்கள் சம்பந்தப்பட்ட ஆதார் எண் திரையில் பிரதிபலிக்கும். இந்த விவரங்கள் அனைத்தும் காட்டப்பட்டால், உங்களிடம் உள்ள ஆதார் எண் உண்மையானது என அர்த்தம்.