Dozen கணக்கில் உயிர்களை காவு வாங்கிய வெப்பம்.. 15,000 பேர் உயிரிழப்பு – உலக சுகாதார நிறுவனம் பகிர் தகவல்!

0
Dozen கணக்கில் உயிர்களை காவு வாங்கிய வெப்பம்.. 15,000 பேர் உயிரிழப்பு - உலக சுகாதார நிறுவனம் பகிர் தகவல்!
Dozen கணக்கில் உயிர்களை காவு வாங்கிய வெப்பம்.. 15,000 பேர் உயிரிழப்பு - உலக சுகாதார நிறுவனம் பகிர் தகவல்!
Dozen கணக்கில் உயிர்களை காவு வாங்கிய வெப்பம்.. 15,000 பேர் உயிரிழப்பு – உலக சுகாதார நிறுவனம் பகிர் தகவல்!

ஐரோப்பா கண்டத்தில் ஜூன் – ஆகஸ்ட் மாதங்களில் அதீத வெப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில் நடப்பு ஆண்டு மட்டும் பல ஆயிரக்கணக்கானோர் அதீத வெப்பத்தால் இறந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதீத வெப்பம்

ஐரோப்பா கண்டத்தில் இந்த ஆண்டில் ஜூன் -ஆகஸ்ட் மாதங்களில் அதீத வெப்பம் நிலவி வந்தது. இதனால் இக்கண்டமானது மிகவும் மோசமான வறட்சிக்குள்ளானது. அதன் காரணமாக இந்த கண்டத்தில் ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பாக உலக சுகாதார துறையின் நிறுவனத்தின் ஐரோப்பிய இயக்குனர் தெரிவித்துள்ளதாவது, பொதுவாக நமது உடலானது பருவநிலை மாற்றங்களின் போது வெப்பம் அதிகரித்தால் நமது உடல் தன்னை தானே குளிர்விக்க முயற்சி செய்யும். இந்த முயற்சியில் தோல்வியை சந்தித்தால் அவ்வப்போது இறப்புகளும் ஏற்படலாம்.

Follow our Instagram for more Latest Updates

அந்த வகையில் ஐரோப்பாவில் இப்படியான சம்பவம் தான் நிகழ்ந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் ஐரோப்பாவில் இருந்து இது தொடர்பாக பெறப்பட்ட தகவலின்படி, ஐரோப்பிய நாடுகளில் 2022ம் ஆண்டில் அதீத வெப்பம் காரணமாக சுமார் 15,000 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது என கூறியுள்ளார். இதில் கடந்த ஜூன்-ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களில் மட்டும் போர்ச்சுக்கலில் 1000 பேர் இறந்துள்ளதாகவும், ஸ்பெயின் நாட்டில் 4,000 பேர் இறந்துள்ளதாகவும், இதேபோல் ஜெர்மனியிலும் 4500 பேர் இறந்துள்ளதாகவும் தரவுகள் பெறப்பட்டுள்ளது என்றார்.

GST வரி செலுத்துவதில் புதிய விதியை அறிமுகம் செய்துள்ள மத்திய அரசு – முக்கிய விவரங்கள் இதோ!

Exams Daily Mobile App Download

இதேபோன்று இன்னும் சில நாடுகளில் இருந்து தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த இறப்புகளின் எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார். அதனால் உலக நாடுகள் அனைத்தும் பருவநிலை மாற்றத்தை சீராக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இல்லையெனில் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாகவும் மற்றும் பிற வானிலை மாற்றங்கள் காரணமாகவும் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என WHO எச்சரித்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!