அரவிந்த் கெஜ்ரிவால் கைது நடவடிக்கை..அமெரிக்க தூதரக தலையீடு – மத்திய அரசின் பதில்!

0
அரவிந்த் கெஜ்ரிவால் கைது நடவடிக்கை..அமெரிக்க தூதரக தலையீடு - மத்திய அரசின் பதில்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது நடவடிக்கை தொடர்பாக அமெரிக்க தூதரகத்தின் கேள்விகளுக்கு இந்திய அரசு பதில் அளித்துள்ளது.

மத்திய அரசு பதில்:

மதுக் கொள்கை ஊழல் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சில நாட்களுக்கு முன்னதாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக ஜெர்மனியின் வெளியுறவு துறை அதிகாரிகள் நாட்டில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற குடிமக்களைப் போலவே அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று இந்திய அரசிற்கு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது அமெரிக்க வெளியுறவு துறையும் கெஜ்ரிவாலின் கைது அறிக்கைகளை கண்காணித்து வருவதாகவும், நியாயமான மற்றும் சரியான நேரத்தில் சட்டபூர்வ செயல்முறையை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்திய அரசுக்கு தெரிவித்திருந்தது.

PhonePe & Google Pay க்கு இனி ஆப்பு – வாட்ஸ் அப்பின் புதிய வசதி விரைவில் அறிமுகம்!

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமானது, இந்திய இறையாண்மை மற்றும் உள்நாட்டு விவகாரங்களுக்கு அமெரிக்கா மதிப்பளிக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஜனநாயக நாடுகளில் இதற்கான பொறுப்பு அதிகமாக உள்ளதாகவும், இல்லை என்றால் அது தவறான முன்னுதாரணங்களாக அமைந்து விடும் என்று தெரிவித்துள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!