டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது.
கைவிட்ட உச்ச நீதிமன்றம்:
டெல்லியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலகத்துறையால் கைது செய்யப்பட்டு உயர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இவரை உயர் நீதிமன்றமானது ஏப்ரல் 23ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்குமாறு உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை ஏற்க மறுத்த அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியின் உச்ச நீதிமன்றத்தில் தனது எதிர்ப்பு மனுவை தாக்கல் செய்தார்.
TVS நிறுவனத்தில் காத்திருக்கும் Lead Digital Engineer பணியிடம் – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
இந்த மனுவில் கெஜ்ரிவால் தனது கைது நியாயமற்றது என்றும், அவர் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டைக் கோருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இம்மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை செய்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின் ஏப்ரல் 24ம் தேதிக்குள் அமலகத்துறையானது தனது பதிலை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், இந்த வழக்கை ஏப்ரல் 29ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும் உச்ச நீதிமன்றமானது இன்று (15.04.2024) தெரிவித்துள்ளது.