விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 போட்டியாளர்களில் இவருக்கு தான் முதல் ஆர்மி – ரசிகர்கள் அதிரடி!
விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இம்முறை பிக்பாஸில், பாவ்னி ரெட்டிக்கு முதன்முதலில் ஆர்மி தொடங்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் சீசன் 5:
தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கப்பட்டு, தற்போது ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கோலாகலமாக கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல் தொடங்கி வைத்தார். அதன் பின் போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளே அனுப்பப்பட்டனர். இந்த சீசனில் முகம் தெரியாத பல போட்டியாளர்கள் வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளனர்.
வெண்பாவுக்கு பதிலடி கொடுத்த கண்ணம்மா – இன்றைய ‘பாரதி கண்ணம்மா’ ப்ரோமோ!
அதனால் பார்வையாளருக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு போட்டியாளர்களின் ஒருவருக்கு ஆர்மி தொடங்கப்படும், சீசன் 1-ல் ஓவியா ஆர்மி தொடங்கப்பட்டது தான் இதற்கு அடித்தளம். இரண்டாவது சீசனில், ஐஸ்வர்யா ஆர்மி தொடங்கப்பட்டது. மூன்றாவது சீசனில் லாஸ்லியா ஆர்மி தொடங்கப்பட்டது. நான்காவது சீசனில், ஆரி ஆர்மி தொடங்கப்பட்டது. இந்த சீசனில் யாருக்கு ஆர்மி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாவ்னி ரெட்டிக்கு ஆர்மி தொடங்கப்பட்டுள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 39வது வார TRP ரேட்டிங் – செம்பருத்தி சீரியல் முதலிடம்!
தன்னுடன் சீரியல்களில் நடித்த பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பாவ்னி ரெட்டியின் திருமண வாழ்க்கை 8 மாதங்களில் முடிந்து விட்டது. அவரது கணவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார். செய்வதறியாது தவித்த பாவ்னி, தனது கவனத்தை திசை திருப்ப சீரியல்களில் ஒப்பந்தமானதாக இதற்கு முன்பு ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். மேலும் இன்றைய ப்ரோமோவில் பாவ்னி, கடந்த 5 வருடமாக தனது கணவரின் நினைவுகளுடன் வாழ்ந்து வருவதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.