தமிழகத்தில் நாளை (செப்.20) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (செப்.20) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (செப்.20) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (செப்.20) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. இப்பதிவில் மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகளை தெரிந்து கொள்வோம்.

மின்தடை:

தமிழகத்தில் தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போதைய புதிய மின் கட்டணத்தின் படி வீடுகளுக்கான மின்சார கட்டணம் 12 %முதல் 52 % வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பொதுப் பயன்பாட்டிற்கான மின் கட்டணம் ஒரு யூனிட் ரூ.8 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மின் கட்டணம் மூலம் மின் வாரியத்துக்கு ரூ.59,435 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஆட்சியில் இருந்தது போல 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் மின் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மின் பயனர்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்கும் நோக்கில் மின்வாரியம் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றுதல் வயர்களை சரி செய்தல் மற்றும் மின்விநியோக பாதைகளுக்கு இடையூறாக உள்ளவைகளை கண்டறிந்து சரி செய்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் துணை மின் நிலையத்தில் இத்தகைய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இதை தடுக்க நடவடிக்கை – UGC முக்கிய அறிவுரை!

Exams Daily Mobile App Download

அதனால் சேஷாங்கனூர், பண்ணக்குப்பம், கொத்தாம்பாக்கம், பக்கமேடு, கலிங்கமலை, வெள்ளாழங்குப்பம், அரங்கநாதபுரம், ஆழியூர், எல்.ஆர்.பாளையம், சின்னபாபுசமுத்திரம், வழுதாவூர், பூசாரிப்பாளையம், வி.புதூர், கெண்டியாங்குப்பம், கலித்திரம்பட்டு, நவமால்மருதூர், அம்மணங்குப்பம்,பக்கமேடு, தாண்டவமூர்த்தி குப்பம், பெரியபாபுசமுத்திரம், சேஷாங்கனூர், குயிலாப்பாளையம், கரைமேடு, திருமங்கலம், கோண்டூர், கெங்கராம்பாளையம், வனத்தாம்பாளையம், பள்ளிப்புதுப்பட்டு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!