நாளை (செப்.14) மின்தடை செய்யப்படும் பகுதிகள் – பொதுமக்கள் கவனத்திற்கு!

0
நாளை (செப்.14) மின்தடை செய்யப்படும் பகுதிகள் - பொதுமக்கள் கவனத்திற்கு!
நாளை (செப்.14) மின்தடை செய்யப்படும் பகுதிகள் - பொதுமக்கள் கவனத்திற்கு!
நாளை (செப்.14) மின்தடை செய்யப்படும் பகுதிகள் – பொதுமக்கள் கவனத்திற்கு!

செப்டம்பர் 14ம் தேதியான நாளை புதன்கிழமை அன்று பழங்கரை, பெருமாநல்லூர் ஆகிய துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதாகவும், அதனால் மின்தடை செய்யப்படும் என்றும் அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

மின்தடை அறிவிப்பு:

தமிழகத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்ற கடந்த ஆண்டு முதல் தான் அதிக அளவில் மின்தடை ஏற்படுகிறது என்று முன்னதாக பல புகார்கள் எழுந்து வந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த புதிதில் திமுக அரசு, இதற்கு முன்னதாக ஆட்சியில் இருந்த அரசு மின்துறையில் எந்த வித பராமரிப்பு பணிகளையும் முறையாக கடைபிடிக்கவில்லை. இதனால் தான் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவித்தது. அதன்பிறகு, மின்னுற்பத்தி குறைவு மற்றும் மத்திய அரசின் மாநிலத்திற்கான ஒதுக்கீடு போன்ற காரணங்களால் மின்தடை ஏற்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆனால், தற்போது தமிழகம் முழுவதும் தடை இல்லாத மின்சாரம் அளிக்கப்படுகிறது. ஆனால், இவற்றிற்கான முறையான பராமரிப்பு அவசியம் என்பதால் மாநிலம் முழுவதும் முறையான முன்னறிவிப்புடன் பராமரிப்பு பணிகளுக்காக பகுதி வாரியாக மின்தடை செய்யப்படுகிறது. இது போன்ற பராமரிப்பு பணிகளின் போது ஊழியர்களின் பாதுகாப்பு கருதி தான் மின்தடை செய்யப்படுகிறது. அந்த வகையில், பழங்கரை, பெருமாநல்லூர் ஆகிய துணை மின்நிலையங்களில் செப்டம்பர் 14ம் தேதியான நாளை புதன்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது என்று மின்சார வாரிய செயற்பொறியாளர் பி.பரஞ்சோதி அறிவித்துள்ளார்.

மாடி வீட்டுல இருக்கீங்களா? ‘இதை’ மட்டும் செய்யலைன்னா ஆபத்து தான் – அரசு விடுத்த எச்சரிக்கை!

Exams Daily Mobile App Download

அதன்படி, அவினாசிலிங்கம்பாளையம், அணைப்புதூர், தங்கம் கார்டன், விஸ்வபாரதிபார்க், பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் ஸ்கூல், ஸ்ரீராம்நகர், நல்லிகவுண்டம்பாளையம், கைகாட்டிபுதூர் ஒரு பகுதி, ராஜன்நகர், ஆர்.டி.ஓ.ஆபிஸ், கமிட்டியார் காலனி, குளத்துப்பாளையம்,வெங்கடாசலபதி நகர், துரைசாமி நகர், பெரியாயிபாளையம் ஒரு பகுதி, பள்ளிப்பாளையம், வி.ஜி.வி.நகர், திருநீலகண்டர் வீதி,நெசவாளர் காலனி, எம்.ஜி.ஆர்.நகர், மகாலட்சுமிநகர், முல்லைநகர், தன்வர்ஷினி அவென்யூ ஆகிய பகுதிகளிலும், பெருமாநல்லூர், கணக்கம்பாளையம்,காளிபாளையம், புதுப்பாளையம், சடையம்பதி, பூலுவப்பட்டி, பாண்டியன்நகர்,எம்.தொட்டிபாளையம், மேற்குபதி, வலசுப்பாளையம், கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிபாளையம், நெருப்பெரிச்சல், செட்டிபாளையம், வாவிபாளையம், தொரவலூர் ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!