மாடி வீட்டுல இருக்கீங்களா? ‘இதை’ மட்டும் செய்யலைன்னா ஆபத்து தான் – அரசு விடுத்த எச்சரிக்கை!
சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கழிவுநீர் சுத்திகரிப்பு தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
எச்சரிக்கை அறிக்கை:
கடந்த 20 வருடங்களாக தான் அடுக்குமாடி குடியிருப்பு கலாசாரம் நம் நாட்டை ஆட்டி படைத்து வருகிறது.பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் இடப்பற்றாக்குறை காரணங்களால் தான் அடுக்குமாடி குடியிருப்புகளின் ஆதிக்கம் அதிகரித்தது. தற்போதைய நிலையில், ஒரு தெருவில் உள்ள தனி வீடுகளின் எண்ணிக்கையை விட அடுக்குமாடி குடியிருப்புகளின் எண்ணிக்கை தான் அதிக அளவில் உள்ளது. அரசு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான விதிமுறைகளை நிர்ணயித்துள்ளது.
அவற்றை முறையாக அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் கடைபிடிப்பதை அடிக்கடி ஆய்வுகள் மூலம் சோதித்து வருகிறது. அந்த வகையில், நகர்ப்புறங்களில் இத்தனை அடி உயரத்தில், இத்தனை மாடிகள் தான் இருக்க வேண்டும் என்றும், இந்த எண்ணிக்கை கிராமப்புறங்களில் வேறு எண்ணிக்கையிலும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இவற்றை மீறும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் அரசின் ஆய்விற்கு பிறகு இடிக்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளது. இது போலவே, குடிநீர், பாதுகாப்பு மற்றும் வாகன நிறுத்தம் போன்ற பலவற்றிற்கும் கட்டுப்பாடுகள் உள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
Exams Daily Mobile App Download
இந்நிலையில், சென்னை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் புதிய எச்சரிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது, அடுக்குமாடி குடியிருப்புகள், தொழில்நுட்ப பூங்காக்கள், வணிக வளாகங்களில் முறையாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பராமரிக்க வேண்டும் என்றும், அவ்வாறு இல்லையெனில், மின் இணைப்பு துண்டிப்பு, வளாகம் மூடுதல், சீல் வைத்தல் போன்றவை செய்யப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்த அளவிலான தரத்திற்கு கழிவு நீரை சுத்திகரித்து மறுசுழற்சி செய்யவும் மரம் வளர்க்கவும் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்