தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 4) மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கி விட்ட நிலையில் அங்கங்கே மின்சார விபத்துகள் ஏற்படாத வண்ணம் மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் துணை மின் நிலையத்தில் நாளை (ஆகஸ்ட் 4) பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார தடை:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் மின்தடை ஏற்பட்ட வண்ணம் இருக்கிறது. மேலும் மழைக்காலம் தொடங்கி விட்ட நிலையில் பல இடங்களில் மழை நீர் தேங்கி இருக்கிறது. அதனால் மின்சார விபத்துகள் ஏற்படும் அபாயம் இருக்கிறது. இந்நிலையில் மின் விபத்துகளை தடுக்கவும், மின்சார தடை ஏற்படாத வண்ணம் இருக்கவும் மாதந்தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையங்களிலும் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் நாளை (ஆகஸ்ட் 4) வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்களை பற்றியும் மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகளின் விவரங்களை பற்றி பார்க்கலாம்.
டிவிஎஸ் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்க்கு சூப்பர் சான்ஸ்
அந்த வகையில், கீழப்பழுவூர், மேலப்பழுவூர், பூண்டி, மலத்தான்குளம், சில்லக்குடி, மேததால், திம்மூர், கல்லக்குடி, அருங்கால், பொய்யூர், கீழ் வண்ணம், ஆகிய ஊர்களில் நாளை (ஆகஸ்ட் 4) காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் அந்த ஏரியாவில் உள்ள மக்கள் மின்தடைக்கு ஏற்றார் போல வேலைகளை முன் கூட்டியே செய்து வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.