டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், கைதுக்கு எதிரான மனுவை ஏப்.15ல் உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.
மனு விசாரணை
கடந்த 2021 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட மதுபான கொள்கை முறைகேடு காரணமாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.அவர் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அதன் பின் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஏப்ரல் 15 ஆம் தேதி வரை அவரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
TN TET தேர்வர்களின் கவனத்திற்கு – உங்களுக்கான முக்கிய தகவல்!
தற்போது டெல்லி அரசு அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளால் டெல்லி அரசியல் களம் செயல்பட்டு வருகின்றன. அவ்வப்போது, கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா வீடியோ மூலம் மக்களைத் தொடர்புக் கொள்கிறார். இந்நிலையில் கைதுக்கு எதிராக மனுவை ஏப்ரல் 15 ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.