ரூ.52,400/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் (APST) கடந்த மதம் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், உதவி மின் பணியாளர், இரவு காவலர், கால்நடை பராமரிப்பு போன்ற பல்வேறு பணிகளுக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் நாளைக்குள் (20.05.2022) விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.
பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு விவரங்கள்:
- அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் (APST) காலியாக உள்ள உதவி மின் பணியாளர், அலுவலக உதவியாளர், கடை நிலை ஊழியர், திருவிலகு, இரவு காவலர், உதவி கைங்கர்யம், சன்னதி தீவட்டி, உதவி பரிச்சாரகர், கால்நடை பராமரிப்பு ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 11 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
- உதவி மின் பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Electrical / Wireman பாடப்பிரிவுகளில் ITI படித்தவராக இருக்க வேண்டும்.
- அலுவலக உதவியாளர், கடை நிலை ஊழியர் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி/ கல்வி நிலையங்களில் 8 ஆம் வகுப்பு படித்தவராக இருக்க வேண்டும்.
- மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.
- விண்ணப்பதாரர்கள் 01.04.2022 அன்றைய நாளின் படி குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
Best TNPSC Coaching Center – Join Now
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணிக்கு தகுந்தாற்போல் குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.52,400/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
APST விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை பெற்று பின் அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து துணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை-5 என்ற முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்று ஒரு நாள் (20.05.2022) மட்டுமே மீதம் உள்ளதால் விண்ணப்பதாரர்கள் இப்பொழுதே விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.