நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி பொது விடுமுறை – மத்திய அரசு அறிவிப்பு!!
நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் பொது விடுமுறை விடப்படுவதாக மத்திய அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. சட்டமேதை அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு விடுமுறை விடப்பட்டுள்ளது.
பொது விடுமுறை:
கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அரசு அலுவலகங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டு வீட்டில் இருந்தே வேலை செய்ய ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அத்தியாவசிய மற்றும் கொரோனா தடுப்பு முன்களப் பணியாளர்கள் மட்டும் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். பின்னர் தொற்று குறைந்ததால் 50 சதவீத ஊழியர்களுடன் அலுவலகங்கள் இயங்கலாம் என அரசு அறிவித்தது.
தமிழகத்தில் தேர்தலுக்கு பின்பு பொதுமுடக்கம் – சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!!
அதற்கடுத்து படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டதால் முழுவீச்சில் அனைத்து நிறுவனங்களும் செயல்படத் தொடங்கின. இதனால் கிடப்பில் போடப்பட்ட அனைத்து பணிகளையும் விரைந்து செய்து முடிக்குமாறு அரசு உத்தரவிடப்பட்டது. எனவே வாரத்தில் 6 நாட்கள் அரசு அலுவலகங்கள் இயங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் வழக்கம் போல வாரத்திற்கு 5 நாட்கள் மட்டும் இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
அரசு விடுமுறைகளும் வழக்கம் போல வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி சட்டமேதை அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது. அதனையொட்டி நாடு முழுவதும் அன்றைய தினம் அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் பொது விடுமுறை விடப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.