தமிழக பள்ளிகளுக்கு ஏப்ரல் 18ம் தேதி விடுமுறை? மாவட்ட ஆட்சியர் விளக்கம்!
தமிழகத்தில் உள்ள அரியலூர் மாவட்டத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி கலியுக வரதராஜ பெருமாள் கோவில் தேர்திருவிழாவினை முன்னிட்டு உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட உள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான விடுமுறை குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை
தமிழகத்தில் தற்போது அனைத்து விதமான ஊரடங்கு கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு விட்டதால் அனைத்து மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அப்படி மிகவும் பிரசித்தமான கோவில் திருவிழாக்கள் நடைபெறும் போது உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வருடம்தோறும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது, கலியுக வரதராஜ பெருமாள் கோவில் தேர்த்திருவிழா.
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? – சுகாதாரத்துறை செயலர் அறிக்கை!
இந்த திருவிழா அரியலூர் மாவட்டத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தேர்விழாவினை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் இந்த திருவிழாவிற்காக உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தகவல் ஒன்றினை தெரிவித்துள்ளார். இதனால் ஏப்ரல் 18ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்று அரசு துறையை சார்ந்த அலுவலகங்கள் யாவும் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 8) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்சாரவாரியம் அறிவிப்பு!
இருப்பினும் இந்த உள்ளூர் விடுமுறையானது தமிழ்நாடு அரசு பள்ளித்தேர்வுத்துறை நடத்தும் பள்ளி இறுதி வகுப்பு அரசு தேர்வுகளுக்கு (மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளித்தேர்வுகள் உள்பட) பொருந்தாது. அவை ஏற்கனவே அரசால் திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்ட நாளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்படுகிறது. இதனை ஈடுசெய்யும் வகையில் அடுத்த மாதம் 7ம் தேதி பணி நாளாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, ஏப்ரல் 18ம் தேதி அவசர நிலையான வேலைகளை கவனிக்க என்று தமிழக அரசு கருவூலங்கள், மாவட்ட கருவூலமும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டும், குறைந்த பணியாளர்கள் பணியாற்றுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.