தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? – சுகாதாரத்துறை செயலர் அறிக்கை!
நாட்டில் டீ அப்போது புதிதாக உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸின் தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளதால் தமிழக சுகாதாரத்துறை செயலர் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
மீண்டும் ஊரடங்கு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் அலைகளின் தாக்கம் அதிக அளவில் பாதிப்புகளை பதிவு செய்து வந்தது. இதனால் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தீவிர கட்டுப்பாடுகளின் விளைவால் சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு விகிதம் குறைய தொடங்கியது. இதனால் தமிழக அரசு தமிழகம் முழுவதும் மீண்டும் வழக்கம் போல் அனைத்து பணிகளும் நடக்க அனுமதி வழங்கியது. மேலும் பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. மக்கள் அனைத்து சமூக செயல்களையும் எந்தவித தடையும் இன்றி செயலாற்ற அனுமதி வழங்கப்பட்டது.
தமிழக அரசு வேலைவாய்ப்பு – ரூ.50,000/- சம்பளம் || 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
இந்நிலையில் வெளிநாடுகளில் கொரோனா தொற்றின் மாறுபாடான ஓமைக்ரான் வைரஸின் உருமாற்றம் அடைந்த XE எனும் புதிய வகை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகை தோற்று மிகவும் அதிக வேகத்தில் பரவும் தன்மை கொண்டதாக உள்ளது. இதனால் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் மும்பையை சேர்த்த ஒருவருக்கு புதிய வகை வைரஸ் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழக சுகாதார செயலர் ராதா கிருஷ்ணன் அவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவுகளை வெளியிட்டுள்ளார்.
Ashok Leyland சென்னை வேலைவாய்ப்பு 2022 – கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்!
அகில், தமிழகத்தில் தற்போது வரை தினசரி பாதிப்பு எண்ணிக்கை 20 ஆக மட்டுமே உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் நோய் பாதிப்பு முழுவதுமாக நீக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நோய் தொற்று அறிகுறிகளால் தனிமை படுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் முககவசம் அணிவது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை மக்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.