அஞ்சல் துறை நேரடி முகவர் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் பணிக்கான அறிவிப்பு வெளியான நிலையில் விண்ணப்பிப்பதற்கான கல்வித்தகுதி மற்றும் அதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முறை மற்றும் வயது வரம்பு முதலியனவற்றை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு அறிவிப்பு:
தமிழகத்தில் அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் பணிக்கான அறிவிப்பு வெளியானது. இதற்கு படித்த இளைஞர்கள், சுயதொழில் செய்பவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் மேம்பாட்டு ஊழியர்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற மத்திய, மாநில அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 50 வயதிற்குள் இருக்கும் அனைவரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது 58 ஆக குறைப்பு? முதல்வர் முக்கிய ஆலோசனை!
நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஊழியர்கள் செய்யும் வணிகத்திற்கு ஏற்றாற்போல் ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்ட நபர் ரூ.5000 கே.வி பத்திரம் அல்லது தமது பெயரில் அஞ்சலகத்தில் ஏதேனும் முதலீடு செய்தல் வேண்டும். உரிமம் முடியும் போது செலுத்திய பணம் திட்டத்திற்குரிய வட்டியுடன் வழங்கப்படும். இந்த பணிக்கான விண்ணப்ப முறை பற்றி கீழே விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
விருப்பம் உள்ளவர்கள் அருகில் இருக்கும் அஞ்சலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டு அதனுடன் சமீபத்திய புகைப்படம் ஒன்றை இணைத்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதனுடன் இணைக்கப்பட வேண்டிய பான் அட்டை, ஆதார் அட்டை, கல்வி சான்று மற்றும் இருப்பிடச் சான்று போன்றவற்றின் நகலுடன் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அவர்களின் அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும். அதே கோட்டத்தை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகத்தை அணுகவும்.