பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை குறைப்பு – அரசு திட்டம்! விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
இந்த கொரோனா காலகட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு சரியாக பாடங்கள் நடத்தாத காரணத்தினால் மாணவர்களின் கல்வித் திறன் குறைந்துள்ளது. இதனை ஈடுகட்டும் விதமாக மாணவர்களின் கோடை விடுமுறையை குறைக்க அரசு முடிவெடுத்துள்ளது.
கோடை விடுமுறை குறைப்பு
உலகம் முழுவதுமே கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்த கொரோனா பரவலின் காரணமாக இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. மேலும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே தேர்வுகளும் நடத்தப்பட்டன. ஆனால் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று சற்று குறைந்த காரணத்தினால் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வும் நடக்க இருக்கிறது. பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையும் சமீபத்தில் வெளியானது. ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு சரியாக பாடங்கள் நடத்தாத காரணத்தினால் தற்போது வேகவேகமாக பாடத்திட்டங்கள் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது.
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – போட்டோவை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
இன்னும் பொதுத்தேர்விற்கு சில நாட்களே உள்ளதால் பள்ளி மாணவர்களும் பீதியில் உள்ளனர். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவளின் காரணமாக மாணவர்கள் வீட்டிலேயே இருந்ததால் அவர்களின் கல்வித் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக பள்ளி நிர்வாகம் அதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு முடிந்து 40 நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மாணவர்களின் கல்வி திறனை கருத்தில் கொண்டு 11 நாட்கள் மட்டுமே கோடை விடுமுறையாக அறிவித்துள்ளது. கோடை விடுமுறை குறைக்கப்பட்டுள்ளதால் மாணவர்களும் சோகத்தில் உள்ளனர்.