செப்.27ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு – விவசாய சங்கங்கள் அறிவிப்பு!
விவசாயிகளுக்காக மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய சங்கங்கள் போராடி வரும் நிலையில், வரும் 27 ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு அடைப்பு
மத்திய அரசு அமல்படுத்திய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் கடந்த 9 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் இந்த போராட்டமானது கடந்த ஜனவரி மாதத்தில் தீவிரமடைந்து, கலவரமாக வெடித்தது. இதில் பல விவசாயிகள் தாக்கப்பட்டபோதும் விவசாயிகள் அனைவரும் தங்களது போராட்டத்தில் மிக உறுதியாக இருக்கின்றனர்.
மேலும் அரசுடன் நடத்திய 10 கட்ட பேச்சு வார்த்தையில் உடன்படாத விவசாயிகள் இந்த போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் வகையில் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். இதற்கு முன்னதாக உத்திரபிரதேச மாநிலத்தில் விவசாய சங்கங்களுக்கு இடையேயான ஒரு முக்கிய மாநாடு நேற்று (செப்டம்பர் 5) நடைபெற்றது.
தமிழக அரசில் 6,156 ஆசிரியர் & ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான கால நீட்டிப்பு – அரசாணை வெளியீடு!
இதில் பஞ்சாப், ஹரியானா, உத்திரபிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 300 விவசாய அமைப்புகளை சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து, வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி ‘பாரதீய கிசான் சங்கம்’ என்ற விவசாயிகளின் சங்கங்கள் சார்பில், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தை நடத்த உள்ளதாக மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.