தமிழக அரசில் 6,156 ஆசிரியர் & ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான கால நீட்டிப்பு – அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் 6,156 ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கு 3 ஆண்டுகள் தொடர் பணி நீட்டிப்பு வழங்கி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
கல்வித்துறை உத்தரவு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் செப்.1 ஆம் தேதி 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வருடன் வருகிற 8 ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
‘நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன்’ – தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டோவுடன் ட்வீட்!
இந்நிலையில் பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் காகர்லா உஷா அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகளில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 6,156 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான பணிக்காலம் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிந்துவிட்டன. இந்நிலையில் இந்த 6,156 பணியிடங்களுக்கு 3 ஆண்டுகள் வரை (2021-23) தொடர் நீட்டிப்பு வழங்கக்கோரி பள்ளிக்கல்வி ஆணையர் தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பியிருந்தார்.
வெண்பாவின் வளைகாப்பிற்கு வந்த ‘பாரதி கண்ணம்மா’ நட்சத்திரங்கள் – வைரல் வீடியோ!
தற்போது அதனை ரிசீலனை செய்து 6,156 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு 2023 டிசம்பர் 31 ஆம் தேதி வரை 3 ஆண்டுகளுக்கு அல்லது தற்காலிக பணியிடங்களுக்கான தேவை குறித்து நிதித்துறையின் மறுஆய்வில் முடிவெடுக்கும் வரை தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது என அந்த அரசாணையில் குறிப்பிட்டுள்ளார்.