மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ. 2 லட்சம் DA நிலுவைத்தொகை? 2022 பட்ஜெட்டிற்கு பின் அறிவிப்பு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ. 2 லட்சம் DA நிலுவைத்தொகை? 2022 பட்ஜெட்டிற்கு பின் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ. 2 லட்சம் DA நிலுவைத்தொகை? 2022 பட்ஜெட்டிற்கு பின் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ. 2 லட்சம் DA நிலுவைத்தொகை? 2022 பட்ஜெட்டிற்கு பின் அறிவிப்பு!

மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை குறித்த அறிவிப்பு, 2022 பட்ஜெட் கூட்டத்திற்கு பிறகு வெளியாகலாம் என்று தகவல்கள் பெறப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

DA நிலுவைத்தொகை

தற்போது 7வது ஊதியக் குழுவின் சமீபத்திய தகவல்களின்படி, 2022 பட்ஜெட் கூட்டத்திற்கு பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு மோடி அரசு பெரிய அறிவிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதாவது, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில் (DA) பெரிய அளவில் மாற்றம் ஏற்பட இருக்கிறது. இது தொடர்பான ஊடக ஆதாரங்களின்படி, பிப்ரவரி 1 அன்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும், பிப்ரவரி 2 அன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை அதிகரிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

TN Job “FB  Group” Join Now

அப்படி நடைபெற்றால் வேளாண் அமைச்சகம் உட்பட பல்வேறு மத்திய அரசுத் துறைகளில் உள்ள 1 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் பயனடைவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் ஒடிசா, ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்கள், தங்களது ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தியுள்ளன. இதன் விளைவாக, மத்திய அரசு ஊழியர்களுக்கான DA குறித்து முடிவு செய்ய பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு அழுத்தம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன் மூலம் யூனியன் பட்ஜெட்க்கு பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி வரும் என்று ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“பாக்கியலட்சுமி” சீரியலில் நடந்த மரணம், கதறும் குடும்பத்தினர் – ப்ரோமோ ரிலீஸ்!

இப்போது நிலுவையில் உள்ள 18 மாத DA குறித்து தகுந்த முடிவு எடுக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் கணக்கில் ரூ. 2 லட்சத்திற்கும் அதிகமான தொகையை எதிர்பார்க்கலாம். ஏனெனில் அரசாங்கம் 18 மாதங்களுக்கான நிலுவையில் உள்ள அகவிலைப்படியை (DA) மொத்தமாக செலுத்தலாம். இதன் மூலம் ஊழியர்கள் ரூ.11,800 முதல் ரூ.2,18,000 வரையிலான DA நிலுவைத் தொகையை பெறலாம். அதாவது, லெவல்-1 ஊழியர்களின் DA நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,000 வரையும், லெவல்-13 தொழிலாளர்களுக்கு ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரை DA கிடைக்கலாம் என்று அறிக்கைகள் கூறுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!