குடியரசு தினவிழாவில் ஜனாதிபதி காவல் பதக்கங்கள் அறிவிப்பு – தமிழகத்தில் 3 பேர் தேர்வு!
நாட்டின் 74வது குடியரசு தினவிழா நாளை (ஜனவரி 26) கொண்டப்பட இருக்கும் நிலையில், ஆண்டு முழுவதும் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி காவல் பதக்கங்கள் வழங்கப்படும். அது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.
ஜனாதிபதி காவல் பதக்கங்கள்:
ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி நாட்டின் குடியரசு தினவிழா கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு 74-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மேலும் குடியரசு தினத்தன்று கொடியேற்றம் மட்டுமில்லாமல் சிறப்பாக பணிபுரிந்த அரசு ஊழியர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு குடியரசு தினவிழாவில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி காவல் பதக்கங்கள் வழங்கப்பட இருக்கிறது.
ஜன.27 தமிழகத்தின் இப்பகுதிகளில் மின்தடை .. உஷார் மக்களே – முன்னெச்சரிக்கை அவசியம்!!
இந்நிலையில் இந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட மாநில காவல்துறை அதிகாரிகள், மத்திய ஆயுதப்படை வீரர்கள், ரயில்வே காவல் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி பதக்கம் வழங்கப்பட இருக்கிறது. அதில் சிறந்த சேவைக்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் காவல் பதக்கம் 21 காவலர்களுக்கு வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதக்கம் தமிழகத்தை சேர்ந்த ஐஜி.தேன்மொழி, செங்கல்பட்டு உதவி கண்காணிப்பாளர் பொன்ராமு, அரியலூர் ஏஎஸ்பி ரவிசேகரனுக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டை சேர்ந்த 21 காவலர்களுக்கு சிறந்த சேவைக்கான பதக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.