மத்திய அரசு ஊழியர்களுக்கு HRA பற்றிய அறிவிப்பு – 7வது சம்பள கமிஷன் அப்டேட்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் அகவிலைப்படி உயர்வு அறிவித்துள்ள நிலையில், இந்த மாதம் இன்னொரு ஆச்சரியம் கிடைக்கும் என்று பல ஊடகங்கள் தெரிவிக்கின்றன. DAக்குப் பிறகு, வீட்டு வாடகைப் படி (HRA) உள்ளிட்ட பிற கொடுப்பனவுகளையும் அரசு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.
வீட்டு வாடகைப் படி:
பல்வேறு துறைகளில் உள்ள மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை (டிஏ) உயர்த்தி மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. அதன்படி 3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 34% ஆக உள்ளது. இதனுடன் மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் இன்னொரு ஆச்சரியம் கிடைக்கும் என்றும் பல ஊடகங்கள் தெரிவிக்கின்றது. DA உயர்விற்கு பிறகு வீட்டு வாடகைப் படி (HRA) உள்ளிட்ட பிற கொடுப்பனவுகளையும் அரசாங்கம் விரைவில் அதிகரிக்கலாம். அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகை கொடுப்பனவு அவர்கள் பணிபுரியும் நகரத்தின் வகையைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது.
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!
நகரத்தின் அடிப்படையில் எக்ஸ், ஒய் மற்றும் இசட் ஆகிய மூன்று பிரிவுகள் உள்ளன. நிலை 10 லுள்ள ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 27% வீதத்தில் HRA பெறுகின்றனர். ஒய் பிரிவினருக்கு 18 முதல் 20 சதவீதம் வரை HRA கிடைக்கும். அதேசமயம், Z பிரிவினர் 9 முதல் 10 சதவீதம் வரை HRA பெறுகிறார்கள். கடந்த ஆண்டு ஜூலை மாதம் HRA கடைசியாக உயர்த்தப்பட்டது. அப்போது அரசும் 28 சதவீதமாக டிஏவை உயர்த்தியது. இப்போது அரசாங்கம் DA ஐ உயர்த்தியுள்ளதால், அது HRA ஐ அதிகரிக்கவும் அல்லது திருத்தவும் வாய்ப்புகள் உள்ளன. ஹெச்ஆர்ஏ உயர்த்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் பெரிய அளவில் உயரும்.
அதிரடியாக உயர்ந்த ஆபரண தங்கத்தின் விலை :மக்கள் அதிர்ச்சி
ஊடக அறிக்கையின்படி, அரசு ஊழியர்களின் HRA விரைவில் 3 சதவீதமாக அதிகரிக்கலாம். X வகை நகரங்களில் உள்ள பணியாளர்கள் தங்கள் HRA வில் 3% உயர்வை பெறுவார்கள். Y வகை நகரங்களில் அவர்களின் கொடுப்பனவுகளில் 2% உயர்வையும், Z பிரிவு நகரங்களில் உள்ள ஊழியர்களின் HRA 1% வரை கூடுதலாக பெறுவார்கள். இதனால் அரசு ஊழியர்களின் HRA 27%லிருந்து 30% ஆக உயரும். இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.