Post Office இல் அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு – இனி இதெல்லாம் கட்டாயம்!
போஸ்ட் ஆபீஸில் கணக்கு வைத்து இருப்பவர் மற்றும் இனிமேல் புதிதாக கணக்கு துவங்க இருப்பவர்களுக்காக ஒரு முக்கிய அறிவிப்பை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டு உள்ளது.
போஸ்ட் ஆபீஸ் முக்கிய தகவல்:
இந்தியாவில் செயல்பட்டு வரும் போஸ்ட் ஆபீஸில் கணக்கு வைத்து உள்ளவர்கள் கட்டாயமான முறையில் தங்களது கணக்கில் முதலில் அவர்களது பான் கார்டு எண் மற்றும் உங்களது மொபைல் நம்பரை அந்த கணக்குடன் இணைத்து இருக்க வேண்டும் என்று முன்னரே கூறி இருந்தனர். இந்தியாவில் இருக்கும் மக்களில் பெரும்பாலானவர்கள் போஸ்ட் ஆபீஸில் தங்களது பணத்தை சேமிக்கும் ஒரு முக்கிய இடமாக மாறிவிட்டது. அதற்கான முக்கிய காரணம் பயனாளர்கள் செலுத்தும் பணத்தின் வட்டி, அது மட்டுமில்லாமல் அந்த பணத்திற்கு பாதுகாப்பு, அரசு சார்ந்த நன்மையான திட்டங்கள், பெண் பிள்ளைகள் தனி சேமிப்பு திட்டம், ஆண் குழந்தை சேமிப்பு திட்டம் , கணவன் மனைவி ஜாயிண்ட் அக்கவுண்ட் திட்டம், பிக்சட் டெபாசிட் திட்டம், மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் ஆகிய பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் கவனத்திற்கு – புதிய கிரெடிட் கார்டு அறிமுகம்!
இவ்வாறு பல திட்டங்கள் இருக்கும் நிலையில் போஸ்ட் ஏற்கனவே அக்கவுண்ட் வைத்து இருப்பவர்களுக்கும், புதிதாக அக்கவுண்ட் துவங்க இருப்பவர்களுக்கும் இந்திய அஞ்சல் துறையின் சார்பாக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கணக்கு வைத்து இருப்பவர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு இந்திய அஞ்சல் துறையின் சார்பாக கூறப்பட்டுள்ளது.
இந்த முக்கிய அறிவிப்பு என்னவென்றால், போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் நீண்ட கால கணக்கு உள்ளிட்ட அனைத்து திட்டங்களிலும், கணக்கை நிறைவு செய்து கொள்ளும்போது பாஸ் புத்தகத்தை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் கணக்கு நிறைவு அறிக்கை வாடிக்கையாளர்களுக்கு போஸ்ட் ஆபிசில் கொடுக்கப்படும்.மேலும் அனைத்துவிதமான கணக்குகளிலும், ரூ.50,000க்கும் அதிகமான பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு இணைந்திருக்க வேண்டும். மேலும் ரூ.20,000க்கு மேல் பணம் மொபைல் எண் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டும் இவ்வாறு இந்திய அஞ்சல் துறை கூறியுள்ளது.