அண்ணா பல்கலைகழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு – அதிர்ச்சி ரிப்போர்ட்!
தமிழக பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் செமஸ்டர் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் வெளியானதை அடுத்து அண்ணா பல்கலைக்கழகம் தேர்ச்சி விகிதம் குறித்த முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
செமஸ்டர் தேர்வு:
தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா பெருந்தொற்றால் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் கல்லூரி மாணவர்களுக்கும் தினசரி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்தது. இதற்கிடையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டது. அதன் பிறகு, மீண்டும் கல்லூரிகள் திறக்கபட்டு நடப்பு கல்வியாண்டில் கல்லூரிகளில் நேரடியாக வகுப்புகள் நடைபெற்று வந்தது. அதனால் செமஸ்டர் தேர்வுகளை நேரடி முறையில் நடத்த உயர் கல்வித்துறை திட்டமிட்டது. இதற்கு மாணவர்கள் மத்தியில் பல்வேறு ஏதிர்ப்புகள் கிளம்பியது. இதனையடுத்து தேர்வுகள் ஆன்லைன் வாயிலவே நடைபெற்றது.
இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா பரவல் – மத்திய சுகாதாரத்துறையின் எச்சரிக்கை!
ஆனால் பொறியியல் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஆண்டு இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைன் வாயிலாகவே நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 2021 – 2022 கல்வியாண்டிற்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியானது. இதனை ஆர்வத்துடன் மாணவர்கள் பார்த்து வந்தனர். கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற இத்தேர்வுகளில் 38% மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது பொறியியல் கல்லூரிகளில் 2022 – 2023 ம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை நடந்து வரும் நிலையில் வெளியாகி உள்ள தேர்ச்சி முடிவுகள் சேர்க்கை விகிதத்தில் பாதிப்பை ஏற்படுத்துமோ என்று கூறப்படுகிறது. மேலும் பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்த மாணவர்கள் மத்தியில் ஒரு வித குழப்பமும் நிலவி வருகிறது. வெளியாகிய தேர்வு முடிவுகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தேர்வு முடிவுகள் குறித்த தகவல்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.