இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா பரவல் – மத்திய சுகாதாரத்துறையின் எச்சரிக்கை!
தமிழகத்தில் மூன்றாவது தவணை தடுப்பூசியாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வேகமாக பரவுவதால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டிய கால இடைவெளி 6 மாதமாக குறைக்கப்பட்டுள்ளது.
பூஸ்டர் தடுப்பூசி
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவலின் வீதம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் தான் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் சென்னையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, பொது இடங்களுக்கு மாஸ்க் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கும் ரூ.1000 உதவித்தொகை? தமிழக அரசுக்கு கோரிக்கை!
இதனையடுத்து, கண்டிப்பாக பொதுமக்கள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசியையும் செலுத்தியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான பொதுமக்கள் முதல் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்தி விட்டனர். ஆனால், கிட்டத்தட்ட 25% பொதுமக்கள் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ளாமல் இருக்கின்றனர். இதனால் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இரண்டு தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்களுக்கு கூட தடுப்பூசி செலுத்தி கிட்டதட்ட 1 ஆண்டுகள் ஆக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருக்கும்.
இதனால், கொரோனா எளிதில் பரவ அதிக வாய்ப்பிருக்கிறது. எனவே, கொரோனா இரண்டு தவணை கொரோனா தடுப்பூசியையும் செலுத்தி கொண்டவர்கள் மூன்றாவது தவணையாக பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது. அடகுவது, இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்களுக்கு பிறகு பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது கொரோனா மிகவும் வேகமாக பரவி வருவதால் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டிய கால இடைவெளி 9 மாதங்களில் இருந்து 6 மாதமாக குறைக்கப்பட்டுள்ளது.