அண்ணா பல்கலைக்கழக மறுதேர்வுகள் 2021 ஒத்திவைப்பு – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!!
அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்தில் இருந்து மறுதேர்வுகள் குறித்த முக்கிய தகவல்கள் அடங்கிய ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது குறித்த விரிவான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
பொது முடக்கம் :
கொரோனா வைரஸின் இரண்டாம் அலையின் காரணமாக தமிழகத்தில் கடந்த 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் மே 10 முதல் 24 ஆம் தேதி வரை அடுத்த கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆயினும் தொற்றின் பரவல் குறையாததினால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு வரும் மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதன் பலனாக தொற்று குறைந்து வருவதினால் இதனை வரும் ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டார்.
ஆனால் சமீபத்தில் இந்த ஊரடங்கினை தளர்வுகளுடன் வரும் ஜூன் 14 ஆம் தேதி வரை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த காலகட்டத்தில் நடத்த முன்னதாகவே தீர்மானிக்கப்பட்ட தேர்வுகள் பலவும் ஒத்திவைக்கப்படுவதாக தற்போது அறிவிப்புகள் வெளியாகி வருகினறன.
அண்ணா பல்கலைக்கழக மறுதேர்வுகள் ஒத்திவைப்பு :
அண்ணா பல்கலைக்கழகத்தின் வாயிலாக ஆன்லைனில் நடத்தப்பட்ட Nov 2020 தேர்வுகளை பல்வேறு காரணங்களினால் எழுத முடியாமல் அதிகளவில் மாணவர்கள் தவற விட்டனர். அவ்வாறு தவற விட்ட UG & PG மாணவர்களுக்கான மறுதேர்வுகள் ஆனது வரும் 14.06.2021 அன்று நடத்தப்பட்ட முன்னதாக திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால் தமிழகம் முழுவதும் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளதாலும், மேலும் 11 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதாலும் இத்தேர்வுகளை வரும் 21.06.2021 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
அவகாசம் நீட்டிப்பு :
மேலும் இத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இருந்த அவகாசத்தினையும் வரும் 12.06.2021 அன்று வரை நீட்டித்து உள்ளது. அதற்கான தேர்வு தேதிகள் அடங்கிய பட்டியலினை இணையதளத்தில் அறிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sir unga susition engala purinchaka Mudiythu but engaluku sikirama exam vechuta Nanga konjm relax ah irupom Ipo adhigama exam mattum dhn think pandram Sooo sikirama Yethuvthu solunga please
நீ வேர ஏம்மா , எக்ஸாம் எக்ஸாம்னுகிட்டு இருக்க , பொருமையாவே வக்கட்டும் , உனக்கென்னாப்பா எக்ஸாம் முடிச்ச பின்னாடி ஜாலியா இருப்ப , நாங்கதா எக்ஸாம் முடிச்சா வேலைக்கு போகனும்ல , கொஞ்ச நாளைக்கு இத வச்சே சுத்துவோம் , அப்ரோ பாப்போம் எக்ஸாம