அண்ணா பல்கலை இன்ஜினியரிங் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேர்வு தேதி வெளியீடு!
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. அதனை தொடர்ந்து பொறியியல் படிப்பிற்கான தேர்வு தேதியை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.
பொறியியல் தேர்வு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளதால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது. அதை தொடர்ந்து நவம்பர் 1 ஆம் தேதியிலிருந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை என அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கியது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 பொங்கல் பரிசு 2022 – முன்னாள் அமைச்சர் வலியுறுத்தல்!
அத்துடன் நடப்பாண்டில் அரையாண்டு, காலாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு பருவத்தேர்வுகளாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. அதேபோல் கடந்த ஆண்டு கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் தான் நடத்தப்பட்டன. தற்போது கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் இல்லாமல் நேரடி தேர்வுகள் மட்டுமே நடைபெறும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்பிற்கான தேர்வு தேதிகளை அறிவித்துள்ளது.
TNPSC குரூப் 2, குரூப் 4 VAO தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – தவறாமல் படிங்க!
அதன்படி பொறியியல் மாணவர்களுக்கு வருகிற ஜனவரி மாதம் 21ம் தேதி முதல் நேரடி தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் பி.இ, பி.டெக் மற்றும் பி.ஆர்க் மாணவர்களுக்கு ஜனவரி 21ம் தேதி தொடங்கி மார்ச் 2 வரை செமஸ்டர் தேர்வு நடத்தப்படும். அதனை தொடர்ந்து எம்.இ., எம்.டெக் மற்றும் எம்.ஆர்க் மாணவர்களுக்கு ஜன. 21ம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் இறுதி வரை செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இவ்வாறு மாணவர்கள் தேர்வுக்கு தயாராக தேவையான கால அவகாசத்தை கொண்ட தேர்வு தேதிகளை அறிவித்துள்ளது.