தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 பொங்கல் பரிசு 2022 – முன்னாள் அமைச்சர் வலியுறுத்தல்!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 பொங்கல் பரிசு 2022 - முன்னாள் அமைச்சர் வலியுறுத்தல்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 பொங்கல் பரிசு 2022 - முன்னாள் அமைச்சர் வலியுறுத்தல்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 பொங்கல் பரிசு 2022 – முன்னாள் அமைச்சர் வலியுறுத்தல்!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகையாக 5000 ரூபாய் வழங்கலாம் என்று தமிழக முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் தெரிவித்துள்ளார்.

பரிசுத்தொகை:

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் போன்ற பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச மளிகை தொகுப்பு, கொரோனா நிவாரண தொகை போன்றவைகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழகத்தில் மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்கள் இலவச வேட்டி, சேலை, கரும்பு போன்ற பொருட்கள் வழங்கப்படும்.

TNPSC குரூப் 2, குரூப் 4 VAO தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – தவறாமல் படிங்க!

அதே போல இந்த வருடமும் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க 1,088 கோடி ரூபாய் ஒதுகீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத்தொகுப்பில் நெய் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

ரூ.30000 சம்பளத்தில் தமிழகத்தில் வேலைவாய்ப்பு – 61 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

ஆண்டுதோறும் பொங்கல் பரிடுத்தொகுப்புடன் சேர்த்து சிறப்பு பரிசுத் தொகையும் வழங்கப்படும். ஆனால் இந்த வருடம் பரிசுத்தொகை எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தின் முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகையாக 5,000 ரூபாய் வழங்கலாம் என்று தெரிவித்துள்ளார்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!