TNPSC குரூப் 2, குரூப் 4 VAO தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – தவறாமல் படிங்க!
TNPSC தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் குரூப் 2 மற்றும் 4 ஆகிய தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகும் உத்தேச மாதங்கள் குறித்த கால அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
குரூப் 2 & 4 தேர்வு:
தமிழகத்தில் பல்வேறு அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் குரூப் 1 முதல் 4 வரை தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகள் நடத்துவதற்கான கால அட்டவணை ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டு அதன் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்படும்.
ரூ.30000 சம்பளத்தில் தமிழகத்தில் வேலைவாய்ப்பு – 61 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக அரசுத் தேர்வுகள் ஏதும் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடந்து அரசுத் தேர்வுகள் நடத்துவது குறித்து தொடர்ந்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்தனர். அதனை தொடர்ந்து குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும் மாதங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு TNPSC தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.
Best TNPSC Coaching Center – Join Now
அந்த வகையில் குரூப் 2 தேர்வு பிப்ரவரி மாதமும், குரூப் 4 தேர்வு மார்ச் மாதமும் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து குரூப் 2 உதவி இயக்குனர் – நகர வடிவமைப்பு பதவிக்கான தேர்வு அறிவிப்பு பிப்ரவரி மாதம் மற்றும் குரூப் 4, VAO தேர்வு மூலம் துறை வாரியாக சமூக பாதுகாப்பு துறை, மீன்வளத்துறை, சிறைத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, தொல்லியல் துறை, சமூக நலத்துறை மற்றும் மாநில நீதித்துறை பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பு மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை வெளியாகும் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.