ரேஷன் கார்டு திட்டத்தில் வரவுள்ள அதிரடி மாற்றம் – இனி மளிகை பொருட்கள் வாங்க முடியாது! பொதுமக்கள் அதிர்ச்சி!
நாட்டில் ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ரேஷன் கார்டு:
இந்தியாவில் ரேஷன் கடைகள் வாயிலாக மக்கள் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்களை பெற்று வருகின்றனர். மேலும் இந்த ரேஷன் அட்டை அனைத்து இடங்களிலும் இருப்பிட சான்றாக கருத்தில் கொள்ளப்படுகிறது. மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளை பெறவும், அரசின் மானியம், சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்டவைகளை பெற ரேஷன் கார்டு அவசியமாகும். ஆரம்பத்தில் இந்த ரேஷன் கார்டை பெற நாம் தாலுகா அலுவலகத்திற்கு சென்று அலைந்து பெற வேண்டி இருந்தது.
தற்போது அந்தந்த மாநில அரசின் உணவு வழங்கல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக எங்கும் அலையாமல் இருந்த இடத்தில் இருந்தே ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் தகுதியற்றோர்களும் ரேஷன் கார்டு திட்டம் வாயிலாக பயன் பெற்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த ரேஷன் கார்டு திட்டம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதில் வசதி படைத்த செல்வந்தர்களும் பொருட்களை வருவதாக கூறுகின்றனர்.
தமிழகத்தில் இலவசமாக மருத்துவப் படிப்பில் சேர வேண்டுமா? விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் இதோ!
Exams Daily Mobile App Download
அதனால் தகுதியற்றவர் பயன்பெற முடியாத வகையில் ரேஷன் கார்டு தொடர்பான விதிகளை மாற்றி அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு தகுதியற்றவர்களின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். அதனால் இனி ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் ரேஷன் உதவி கிடைக்காது என்று கூறப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் மொத்தம் 2.41 கோடி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்