முதியோர் ஓய்வூதியதாரர்களுக்கு அடிச்ச பம்பர் லாட்டரி – ஓய்வூதிய தொகை உயர்வு! மாநில அரசின் அறிவிப்பு!
மாநிலத்தில் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியதை அடுத்து இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகையை உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் உயர்வு:
நாடாளுமன்றத்தில் 2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 1ம் தேதி அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து, மற்ற மாநில அரசுகளும் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் சில மாநிலங்கள் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர்.
அந்த வகையில், தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. இதில் அம்மாநில முதல்வர் கூறியதாவது, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவது, பொதுமக்களுக்கு சிறந்த முறையில் சுகாதார வசதிகளை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
இதையடுத்து மாநிலத்தில் முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்குவதாக அறிவித்துள்ளார். அதன்படி தற்போது ரூ.1200 என வழங்கப்பட்டு வரும் ஓய்வூதிய தொகையை ரூ.1500 ஆக உயர்த்தி வழங்குவதாக தெரிவித்துள்ளார்.