PF பயனர்கள் கவனத்திற்கு – 3வது முறையாக கொரோனா முன்பணம்? முழு விளக்கம் இதோ!
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் மூன்றாம் அலை தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், 3வது முறையாக EPFO கணக்கிலிருந்து முன்பணம் பெறும் சேவையை அரசாங்கம் அனுமதிக்குமா என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
கொரோனா முன்பணம்
நாடு முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக காணப்பட்டு வரும் கொரோனா பேரலை தொற்று பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் முதல் 2 அலைகளின் போது விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளின் நிமித்தம் பலர் வேலைகளை இழந்தும், தொழில்களை இழந்தும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த பாதிப்புகளை கவனத்தில் கொண்டு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPF) தனது சந்தாதாரர்களுக்கு 2020ம் ஆண்டு முதல் சேமிப்பு கணக்கில் இருந்து கொரோனா சிகிச்சைக்கான பணத்தை வழங்கி வருகிறது.
தமிழக அரசின் ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
இந்த சேவைகள் கொரோனா காலத்தில் வேலை இழந்து நிற்கும் தொழிலாளர்களுக்கு உதவும் வண்ணமாக வரி இல்லாத, திரும்ப செலுத்த தேவையில்லாத சலுகைகளை முன்பணமாக அனுமதிக்கிறது. அந்த வகையில் கொரோனா முன்பணத்தை பெறும் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா (PMGKY) திட்டத்தின் கீழ் இந்த சிறப்புத் திரும்பப் பெறுவதற்கான சேவை மார்ச் 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது மே 31, 2021 நிலவரப்படி, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 76.31 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா முன்பண கோரிக்கைகளைத் தீர்த்து, ரூ.18,698.15 கோடியை வழங்கியுள்ளதாக அறிவித்தது.
2 நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு ஊழியர்கள் கவனத்திற்கு!
இப்போது மூன்றாவது முறையாக கொரோனா EPFO முன்பணத்தை அரசாங்கம் அனுமதிக்குமா என்று பணியாளர்கள் தரப்பில் இருந்து பல்வேறு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதாவது நாடு முழுவதும் கொரோனா 3ம் அலைத்தொற்று பரவல் தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கும் நிலையில் EPFO பயனர்கள் கொரோனா முன் பணத்தை பெறும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. இப்போது ஏப்ரல் 2021 முதல் நவம்பர் 30ம் தேதி வெளியிடப்பட்ட தரவுகளின் படி, EPFO அமைப்பு 68.10 லட்சம் கோரிக்கைகளுக்கு சுமார் ரூ.14,242 கோடி முன் பணம் செலுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.