கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு சலுகைகள் – அமெரிக்கா அரசு அறிவிப்பு!!
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்களை அமெரிக்க அரசு ஊக்குவித்து வருகிறது. இதற்காக பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
அமெரிக்க அரசின் சலுகைகள் :
கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் பரவி கடந்த வருடம் இல்லாத அளவு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலக நாடுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. முதற்கட்டமாக ஊரடங்குகளை அமல்படுத்தியது. பிறகு பரிசோதனைகளை அதிகப்படுத்தியது. இவ்வாறாக பல கட்டங்களாக தொற்று பரவலை குறைக்க முயற்சித்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
இதனை தொடர்ந்து தற்போது தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. அனைத்து நாடுகளும் இலவசமாக தடுப்பூசிகளை மக்களுக்கு அளித்து வருகிறது. இந்த கொரோனா தடுப்பூசிகள் குறித்து மக்களிடையே சில சந்தேகங்கள் நிலவுகிறது. இதனால் மக்கள் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள மறுக்கின்றனர். இவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும் அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
“கற்போம் எழுதுவோம்” தேர்வுகள் தள்ளிவைப்பு – கல்வி டிவி வழியே பாடம்!!
இதன் படி தடுப்பூசி மையங்களுக்கு செல்வோருக்கு உபர் லிஃப்ட் வாகனங்களில் இலவசமாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 4ஆம் தேதி வரை இச்சலுகை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் தனது காப்பி கப்களில் தடுப்பூசி விவரங்களை பதித்து மக்களை ஊக்குவிக்க வெள்ளை மாளிகையுடன் கூட்டணி அமைத்துள்ளது.