இந்த ஆண்டும் நிறுவனங்களில் தொடரும் பணி நீக்கம்…கேள்விக்குறியான ஊழியர்களின் நிலை?
உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை காரணமாக கடந்த ஆண்டு முன்னணி நிறுவனங்களில் பணி நீக்கங்கள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்த ஆண்டும் இந்த நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றனர்.
பணி நீக்கம்
உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை காரணமாக கடந்த ஆண்டுகளில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சியை தக்க வைத்து கொள்ள பணி நீக்கங்களை மேற்கொண்டு வந்தன. அத்துடன் புதிதாக ஊழியர்களை பணி அமர்த்தலையும் முடக்கினர். இதையடுத்து தற்போது 2023ம் ஆண்டு தொடங்கிய நிலையில், இப்போதும் பணி நீக்கங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
RBL வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வட்டி விகிதம் உயர்வு! ஜன. 25 முதல் அமல்!!
Follow our Instagram for more Latest Updates
அதன்படி இந்த ஆண்டு தொடங்கி 20 நாட்களே முடிவடைந்த நிலையில், Amazon, Google, Intel, MicroSoft உள்ளிட்ட நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன. இதில் Amazon நிறுவனம், இந்தியாவில் 1000 பணியாளர்கள் உட்பட உலகம் முழுவதும் சுமார் 18000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது. இதே போன்று, கூகுள் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான alphabet, 12000 பணியாளர்களை பணிநீக்கம் செய்வதாக தெரிவித்துள்ளது.
இதையடுத்து MicroSoft நிறுவனமும், பொருளாதார நிலைமைகள் மற்றும் வாடிக்கையாளர்களின் முன்னுரிமைகளை மாற்ற இருப்பதாக கூறி தனது நிறுவனத்தின் 10000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, Intel நிறுவனம் அமெரிக்காவில் இருக்கும் பல்வேறு நகரங்களில் பணி நீக்கம் செய்து வருகிறது. இதனால் தற்போது பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.