BIS தரக்குறியீடு இல்லாமல் விற்பனை – Flipkart, Amazon, Snapdeal நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!!
உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான flipkart, amazon, snapdeal நிறுவனங்கள் BIS தர குறியீடு இல்லாமல் பொம்மைகளை விற்பனை செய்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து மத்திய அரசு அந்நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
BIS குறியீடு:
இன்றைக்கு மக்கள் பொருட்களை வாங்க கடைகளுக்கு செல்ல வேண்டிய அவசியமே இல்லை. அதற்கு பதிலாக வீட்டில் இருந்தபடி flipkart, amazon, snapdeal, Meesho உள்ளிட்ட ஆன்லைன் தளங்கள் வாயிலாக தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி வருகின்றனர்.
Railway Budget 2023 : ரயில் துறையின் கோரிக்கைகள் நிறைவேற்றம்? முழு விவரம் உள்ளே!!
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் flipkart, amazon, snapdeal உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்கள் BIS தரக் குறியீடு இல்லாமல் பொம்மைகளை விற்பனை செய்ததாக புகார்கள் எழுந்துள்ளது. தரமற்ற பொருட்கள் விற்பனையை தடுக்க பொம்மைகளுக்கு BIS சான்றிதழைக் கட்டாயமாக்கப்பட்டது. இந்த BIS சான்றிதழ் அளித்துள்ள பொம்மைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற சட்டம் கடந்த 2021ம் ஆண்டு முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்த விதிகளை மீறியதாக அமேசான், பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதனை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள சில்லறை விற்பனைக் கடைகளில் தற்போது வரை BIS சான்றிதழ் இல்லாத 18,600 பொம்மைகளை மத்திய அரசு பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.