மாநிலம் முழுவதும் ‘இந்த’ 7 நாட்கள் விடுமுறை – தேர்தல் எதிரொலி!

0
மாநிலம் முழுவதும் 'இந்த' 7 நாட்கள் விடுமுறை - தேர்தல் எதிரொலி!

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் ஏழு நாட்கள் விடுமுறை அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

விடுமுறை அறிவிப்பு:

மேற்குவங்கம் மாநிலத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை மொத்தம் ஏழு கட்டங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் 42 மக்களவைத் தொகுதிகள் உள்ளதால் தேர்தல் பணிகள் சீராக நடப்பதற்காக ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இந்நிலையில் தேர்தல் நாளில் இருக்கும் பதற்றமான சூழ்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு கருதியும், வாக்காளர்களின் நலன் கருதியும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

கடுமையாகும் வெயில்.. பேருந்து சேவை குறைப்பு – அரசு நடவடிக்கை!

மேலும் பெரும்பாலான பள்ளி, கல்லூரிகள் வாக்கு சாவடிகளாக செயல்படுவதும் ஒரு காரணமாக உள்ளது. அதன்படி ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 4, மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை தினமாக இருக்கும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!