தமிழகத்தில் முழு ஊரடங்கில் இறைச்சி கடைகள் உட்பட அனைத்தும் மூடல் – மாவட்ட ஆட்சியர் தகவல்!
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ஓமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்த தொற்று பரவலினால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முழு ஊரடங்கில் கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியை அறிவுறுத்தியுள்ளார்.
இறைச்சி கடைகள் மூடல்?
தமிழகத்தில் கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா பெருந்தொற்று தற்போது மீண்டும் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவை தொடர்ந்து உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்றும் வேகமெடுத்து உள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா 3வது அலை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அதனால் பால்வேறு மாநிலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 19 வரை வார இறுதி முழு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
அதாவது கடந்த ஜன.6ம் தேதி முதல் வார நாட்களில் இரவுநேர ஊரடங்கும், வாரத்தின் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய தேவைகள் குறித்தும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஞாயிற்று கிழமைகளில் இறைச்சி கடைகள் இயங்கலாம் என்றும் மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் விதமாக கூடுதல் கடைகள் இயங்க ஏற்பாடு செய்யுமாறு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களை தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி இதுவரை இரவு நேரங்களில் 11 மணி வரை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
ஜனவரி 31ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாநில அரசு உத்தரவு!
இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது இறைச்சி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும் என்று ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். அதாவது நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் அவர்கள் வணிகர் சங்க நிர்வாகிகள், கோழிக்கடை உரிமையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட அனைவருடன் நடத்திய கூட்டத்தில் இத்தகைய தகவல் வெளியிட்டுள்ளார். மேலும் அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எவ்வித மாத்திரைகளும் வழங்க கூடாது என்றும், தொழிற்சாலைகள் அரசின் விதிகளுக்கு உட்பட்டு நடைபெற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.