அர்ஷ் பிறந்த பிறகு முதல் ரம்ஜானை கொண்டாடிய ஆலியா & சஞ்சீவ் – வைரலாகும் வீடியோ!
ஆலியாவிற்கு தற்போது தான் ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து முதல் ரம்ஜானை குடும்பத்தினர்கள் அனைவரும் கொண்டாடியுள்ளனர். ரம்ஜானை சிறப்பாக கொண்டாடிய போது எடுக்கப்பட்ட வீடியோவை ஆலியா தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஆலியா & சஞ்சீவ்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி தொடரின் மூலமாக பிரபலமானவர் தான் ஆலியா . இந்த தொடருக்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி சீசன் 2 தொடரில் நடிக்க அறிமுகமானார். இந்த தொடரில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்தார். சீரியலும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நேரத்தில் ஆலியா இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமானார்.
கர்ப்பமாக இருந்த நிலையிலும் தொடர்ந்து ராஜா ராணி சீரியலில் நடித்து வந்தார். பிரசவத்திற்கு சில நாட்களுக்கு முன்பாகவே ராஜா ராணி சீரியல் இருந்து விலகினார். தற்போது அவருக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை இருக்கிறது. குழந்தை பிறந்த பிறகு குழந்தையை கவனித்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக மீண்டும் சீரியலில் இணையப் போவதில்லை என கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். அவ்வப்போது தனது மகனுடன் இருக்கும்படியான புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார். சஞ்ஜீவ்வும் குழந்தையுடன் தனது நேரத்தை முழுக்க முழுக்க செலவிட்டுக் கொண்டிருக்கிறார்.
அர்ஷ் பிறந்த பிறகு முதல் ரம்ஜானை குடும்பத்தினர்கள் அனைவரும் கொண்டாடியுள்ளனர். அர்ஷ் பிறந்த பிறகு வரும் முதல் ரம்ஜானை மிகச் சிறப்பாக கொண்டாட வேண்டுமென குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் துணிமணி எடுத்துக் கொடுத்து அனைவரையும் வீட்டிற்கு வரவழைத்து பிரியாணி சமைத்து விருந்து வைத்துள்ளனர். ரம்ஜானின் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் அனைத்தையும் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மற்றும் ஆலியா பிரியாணி சாப்பிடும் அழகை சஞ்சீவ் ரசிக்கும்படியான இந்த காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை ரசிக்க வைத்து வருகிறது.