தமிழ்நாடு வனத்துறையில் 35,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023 – உடனே விண்ணப்பிக்க முந்துங்கள்!
தமிழ்நாடு வனத்துறை, வனவிலங்கு பாதுகாப்பு மேம்பட்ட நிறுவனத்தில் (AIWC) வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.இதில் Senior Research Fellow, Research Assistant பணிகளுக்கென 03 காலிப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.எனவே விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | AIWC |
பணியின் பெயர் | Senior Research Fellow, Research Assistant |
பணியிடங்கள் | 03 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.01.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline/Online |
AIWC காலிப்பணியிடங்கள்:
தமிழ்நாடு வனத்துறை அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் வனவிலங்கு பாதுகாப்பு மேம்பட்ட நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.இதில் Senior Research Fellow, Research Assistant பணிகளுக்கென 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
AIWC வயது வரம்பு:
வனவிலங்கு பாதுகாப்புக்கான மேம்பட்ட நிறுவனம் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 01.01.2023 தேதியின்படி விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 28 ஆக இருக்க வேண்டும்.மேலும் SC/ ST/ Women/ BC/ MBA/ PH பிரிவினருக்கு 05 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
HOCL நிறுவனத்தில் ரூ.22,000/- ஊதியத்தில் வேலை – 10 வகுப்பு தேர்ச்சி போதும்!
வனவிலங்கு பாதுகாப்புக்கான மேம்பட்ட நிறுவனம் கல்வித் தகுதி:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க AIWC அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள்,அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் CSE/ IT, ME/ M.Tech, முதுகலை பட்டம், M.Sc ஆகியவற்றில் BE/ B.Tech முடித்திருக்க வேண்டும்.
AIWC ஊதிய விவரம்:
இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ .20,000– 35,000/- ஊதியமாக வழங்கப்படும்.
AIWC தேர்வு செய்யப்படும் முறை :
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூரவ அறிவிப்பை பார்வையிடவும்.
AIWC விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப்படிவத்தை உரிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.