Airtel குறைந்த விலையில் நிறைந்த பலன்கள் – ரீசார்ஜ் திட்ட விபரங்கள் இதோ!
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக இருந்து வருவது ஏர்டெல் நிறுவனம். ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்கு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏர்டெல்:
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் பாரதி ஏர்டெல் நிறுவனம் ஒன்றாகும். அதில் குறைந்த விலையில் பல சிறப்பு திட்டங்கள், ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றது. முன்னணி நிறுவனமான ஏர்டெல் பிப்ரவரி மாதம் வரை 34 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. தொலைபேசி சேவை, தொலைத்தொடர்பு இணைப்பு போன்ற சேவைகளை இந்த நிறுவனம் வழங்குகிறது. போஸ்ட்பெய்டு, ப்ரீபெய்ட் என இரண்டு சேவைகளையும் வழங்குகிறது.
தமிழகத்தில் செப்.9 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
ஏர்டெல் நிறுவனமானது 28 நாட்கள் முதல் 84 நாட்கள் வரையிலான பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இத்துடன் டேட்டா சேவைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. அனைவருக்கும் பயன்படும் குறைந்த விலையில் வழங்கப்படும் திட்டமானது 28 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதனை தொடர்ந்து தற்போது ரூ. 400க்கு திட்டம் ஒன்றை வழங்கி வருகிறது. 84 நாட்கள் வரை செல்லுபடியாகும் இந்த திட்டத்தின் விலை அதிகமாக இருந்த நிலை தற்போது புதிய சலுகை அறிமுகமாகியுள்ளது.
ஜெரூசலேம் புனித பயணத்திற்கு ரூ.60,000 மானியம் – தமிழக அரசு அறிவிப்பு!
ரூபாய் 379 க்கு இந்த திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. மூன்று மாதங்கள் வரை (84 நாட்கள்) கால அவகாசம் வழங்கி வரும் நிலையில் அன்லிமிடெட் கால் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. மேலும் 6 ஜிபி அதிவேக டேட்டா வழங்குகிறது. அதனுடன் 900 இலவச எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. Wynk Music மற்றும் Free Hello Tunes போன்ற நன்மைகளையும் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம். மேலும் ரூ.379 ப்ரீபெய்ட் திட்டத்தில், FASTag வாங்கும் போது வாடிக்கையாளர்களுக்கு ரூ.100 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.