தமிழகத்தில் செப்.9 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் செப்.9 மின்தடை ஏற்படும் பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் செப்.9 மின்தடை ஏற்படும் பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் செப்.9 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

உடுமலையில் உள்ள தேவனுர்புதூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 9 ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின் தடை :

தமிழகத்தில் கடந்த ஜூன் மாதங்களில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக அனைத்து பகுதிகளிலும் மின்தடை செய்யப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் 9 மாத காலமாக மின் பராமரிப்பு பணிகள் ஏதும் நடைபெறவில்லை. அதனால் ஜூன், ஜூலை மாதங்களில் திமுக தலைமையிலான அரசு மின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டது. மேலும் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்த நடவடிக்கைளை எடுக்கப்படும் என்று மின்சாரத் துறை தெரிவித்துள்ளது.

ஜெரூசலேம் புனித பயணத்திற்கு ரூ.60,000 மானியம் – தமிழக அரசு அறிவிப்பு!

அதனை தொடர்ந்து மின் சம்பந்தப்பட்ட புகார்களை கவனிக்க மின் புகார் மையங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. கடந்த மாதங்களில் நடைபெற்ற மின் பராமரிப்பு பணிகளுக்கு பிறகு மாதந்தோறும் தவறாது அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களிலும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை அதிகரிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

மற்ற பகுதிகளை தொடர்ந்து உடுமலையை அடுத்துள்ள தேவனூர்புத்தூர் பகுதியில் உள்ள துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செல்லம்பாளையம், காரம்பாளையம், நல்லூர், பொன்னன்கவுண்டனூர், தொண்டமுத்தூர் ஆகிய பகுதிகளில் செப்டம்பர் 9 ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!