ஏர்டெல் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ரீசார்ஜ் கட்டண உயர்வு அறிவிப்பு!!
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணத்தை ரூ.155 ஆக உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு ஒடிசா, ஹரியானா உள்ளிட்ட ஏழு வட்டங்களில் அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண உயர்வு
இன்றைய காலகட்டத்தில் இணையம் இல்லாத இடங்களை அல்லது நபர்களை பார்ப்பது மிகவும் கடினமாகும். இப்படி ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு பெருகி வரும் சூழலில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏகபோக வளர்ச்சி கண்டு வருகிறது. அதாவது, வாடிக்கையாளர்களின் மனநிலை மற்றும் விருப்பத்திற்கு ஏற்றபடி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் பலவிதமான சலுகைகளை அளித்து மாதாந்திர ரீசார்ஜ் திட்டங்களையும் உயர்த்தி வருகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிகர லாபம் 43% உயர்வு – விவரங்கள் இதோ!!
Follow our Twitter Page for More Latest News Updates
அந்த வகையில், இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கான ரீசார்ஜ் திட்டங்களை உயர்த்தியுள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் இனி ரூ.99 என்ற குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டத்திற்கு பதிலாக ரூ.155 சேவையை பெற்றுக்கொள்ள முடியும். இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் 1 ஜிபி இணைய டேட்டா மற்றும் 300 இலவச எஸ்எம்எஸ் சேவையுடன் வருகிறது. இந்த கட்டண உயர்வு எளிய மற்றும் அடித்தட்டு மக்களை பாதிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.