பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிகர லாபம் 43% உயர்வு – விவரங்கள் இதோ!!
பஞ்சாப் நேஷனல் வங்கி தனது மூன்றாவது காலாண்டுக்கான நிகர லாப விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, இவ்வங்கியின் நிகர லாபம் 43 சதவீதம் வரை அதிகரித்து ரூ.269 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாபம் உயர்வு
இந்தியாவில் செயல்பட்டு வரும் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பஞ்சாப் நேஷனல் வங்கி. இவ்வங்கி நாடு முழுவதும் சுமார் 700க்கும் மேற்பட்ட நகரங்களில், 6000க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ளது. இந்த வங்கி நிறுவனம், நடப்பு நிதியாண்டுக்கான மூன்றாவது காலாண்டு விவரங்களை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த தகவலின்படி, பஞ்சாப் நேஷனல் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் வங்கியின் மூன்றாவது காலாண்டு நிகர லாபம் 43 சதவீதம் வரை அதிகரித்து ரூ.269 கோடியாக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு 2.73% அகவிலைப்படி உயர்வு – தெலுங்கானா அரசு ஒப்புதல்!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்த உயர்வு, வங்கியின் சில்லறை கடன் பிரிவில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக நிகழ்ந்ததாக வங்கி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கிரிஷ் கௌஸ்கி கூறியுள்ளார். இதற்கு முன்னதாக, 2021-22 ஆம் நிதியாண்டின் 3 ஆம் காலாண்டில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிகர லாபம் ரூ.188 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், டிசம்பர் 31, 2022 தேதிப்படி இவ்வங்கியின் சொத்து கடன் ரூ.58,034 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.