அதிவேக இன்டர்நெட் வேகத்துடன் ஏர்டெல்லின் 5ஜி சேவை வந்தாச்சு – குஷியில் வாடிக்கையாளர்கள்!!
இந்தியாவில் கடந்த 1ம் தேதி முதல் 5ஜி சேவையை பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்தார். இதையடுத்து தற்போது ஏர்டெல் நிறுவனம் தனது 5ஜி சேவையை தொடங்கியுள்ளது. இச்சேவையை எப்படி பெறலாம் என விரிவாக பார்ப்போம்.
5ஜி சேவை
நாட்டில் அதிவேக இன்டர்நெட் சேவை கிடைக்கும் வகையில் ஐந்தாம் தலைமுறை தொலை தொடர்பு சேவையான 5ஜியை கொண்டு வருவதற்கு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் 5ஜி சேவையின் ஏலத்தை தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் எடுத்துள்ளனர். அத்துடன் இவ்விரு நிறுவனங்களும் போட்டி போட்டு 5ஜி சேவையை நாட்டில் தொடங்கியுள்ளன. இதில் ஜியோ நிறுவனம் தனது 5ஜி சேவையை மும்பை, கொல்கத்தா, டெல்லி மற்றும் வாரணாசி ஆகிய நகரங்களில் தொடங்க இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனமும் டெல்லி, சென்னை, பெங்களூரு, சிலிகுரி, நாக்பூர், மும்பை, ஹைதராபாத், வாரணாசி உள்ளிட்ட 8 பெருநகரங்களில் 5ஜி சேவையை தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் தற்போது இந்த 5ஜி சேவையை எப்படி பெறுவது என வாடிக்கையாளர்கள் மத்தியில் குழப்பங்கள் இருக்கும். இது தொடர்பாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 5ஜி சேவையை பெற 5ஜி சப்போர்ட் செய்யும் மொபைல் போன் இருந்தாலே போதும் என விளக்கமளித்துள்ளது.
தமிழகத்தில் ‘இந்த நாளில்’ மதுபான கடைகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
Exams Daily Mobile App Download
மேலும் நீங்கள் இதற்கென தனியாக சிம் கார்டு எதுவும் வாங்க தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த 5ஜி சேவையை பெற வாடிக்கையாளர்கள் கூடுதலான கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையானது 4ஜி சேவையை காட்டிலும் 30 முதல் 40 மடங்கு அதிவேக இன்டர்நெட் வேகத்துடன் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் தற்போது சென்னையில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளதால் இங்குள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்