தமிழகத்தில் ‘இந்த நாளில்’ மதுபான கடைகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
தமிழகத்தில் அக்டோபர் மாதத்தில் 9 ஆம் தேதி மீலாது நபி தினம் கடைபிடிக்கப்படுவதால், அன்றைய தினம் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் விடுமுறை:
தமிழகத்தில் மதுபான விற்பனை செய்யும் டாஸ்மாக் கடைகள் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதனால் முறையாக நேரம் அறிவிக்கப்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், டாஸ்மாக் கடைகள் இருப்பிடமும் முக்கியமான பல அம்சங்களை கருத்தில் கொண்டு தான் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, குடியிருப்பு பகுதிகள், பள்ளி, கல்லூரிகள், மத வழிபாட்டு தளங்கள் போன்றவற்றிற்கு அருகில் டாஸ்மாக் கடைகள் இருக்கக்கூடாது என்பது அடிக்கடி கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல், முக்கிய பண்டிகை நாட்களில், விழா காலங்களில் மற்றும் முக்கிய தலைவர்களின் பிறந்த நாள் அல்லது நினைவு நாட்களில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு விடுகின்றன. இந்நிலையில், வரும் அக்டோபர் 9ம் தேதியான ஞாயிற்று கிழமை இஸ்லாமிய மதத்தை சேர்ந்த நபிகள் நாயகம் முகமது நபி அவர்களின் பிறந்த தினம் வர உள்ளது. இதனை உலக முஸ்லிம்கள் அனைவரும் மிகவும் சிறப்பாக கொண்டாடுவார்கள்.
ஆசிரியர் பணி வழங்க மறுப்பு – தேர்வர் மனு தாக்கல் – மதுரை உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
Exams Daily Mobile App Download
நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு அன்றைய தினம் விடுமுறை அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் அவர்கள் தற்போது, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், அக்டோபர் 9ம் தேதியன்று மிலாது நபி தினத்தை முன்னிட்டு அடைக்கப்பட வேண்டும் என்றும், அதை மீறி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்