அரசின் ஏர் இந்தியா நிறுவனத்தை கைப்பற்றிய டாடா – அதிகாரபூர்வ அறிவிப்பு!
மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்பதற்கு திட்டமிட்டு வந்த அரசு அதற்கான ஏலத்தை அறிவித்திருந்தது. இதில் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா பெற்றுக்கொள்ள இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது.
டாடா நிறுவனம்
இந்தியாவில் மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கும் கொரோனா தொற்று நோய்க்கான தீர்வுகள் இன்னும் கிடைக்கவில்லை. இந்த நோய்த் தொற்றினால் பல உயிர்கள் பறிபோனதுடன் நாட்டின் பொருளாதார நிலையும் சீர் குழைந்துள்ளது. இப்படி இழந்து போன இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
சபரிமலை செல்பவர்களின் கவனத்திற்கு – மண்டல மகர விளக்கு பூஜை தேதி அறிவிப்பு!
அந்த வகையில் தற்போது நஷ்டத்தின் மத்தியில் செயல்பட்டு வரும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியார் மயமாக்க அரசு நிர்ணயம் செய்துள்ளது. அதற்காக விமான நிறுவனத்தின் 100 % பங்குகளையும் விற்க ஏலத்தை நடத்தவும் அரசு முடிவு செய்தது. இதை தொடர்ந்து ஸ்பைஸ் ஜெட் மற்றும் டாடா நிறுவனங்கள் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை கையகப்படுத்த போட்டி போட்டு வந்தது.
அக்.15ம் தேதிக்குள் அரசு ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி – அரசு உத்தரவு!
இந்நிலையில் மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் ரூ. 70,000 கோடி வரையில் நஷ்டத்தில் காணப்படும் ஏர் இந்தியா நிறுவனத்தை இனி டாடா குழுமம் நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.