அர்ஷ் பிறந்த பிறகு வீட்டில் அதிகமாக குறும்பு செய்யும் ஐலா பாப்பா – சமாளிக்க முடியாமல் கதறும் ஆலியா!
ஆலியாவிற்கு தற்போது அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. அர்ஷ் வீட்டிற்கு வந்தவுடன் ஐலா பாப்பாவிற்கும் குறும்புத்தனம் அதிகமாகி விட்டது. ஐலா பாப்பா செய்யும் அட்டகாசத்தை பொறுக்க முடியாமல் ஆலியா கதறி கொண்டிருக்கிறார்.
ஐலா பாப்பா:
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி சீரியல் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் தான் ஆலியா. இவர் அதே சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். திருமணமாகி சில மாதங்களிலேயே ஆலியா கர்ப்பமானார். கர்ப்பமாக இருக்கும் போதும் தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தார். ஆலியாவிற்கு ஐலா என்கிற அழகிய பெண் குழந்தையும் இருக்கிறது. ஐலா பாப்பா பிறந்த பிறகு வளர்ந்த ஒவ்வொரு தருணங்களையும் அழகாக படம் பிடித்து சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டபடி இருந்தார்.
Exams Daily Mobile App Download
ராஜா ராணி தொடருக்கு பிறகு ஆலியா அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி சீசன் 2 நிகழ்ச்சியில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த சீரியலில் நடித்து கொண்டிருந்த போதே மீண்டும் இரண்டாவது முறை கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும் கூட தொடர்ந்து ராஜா ராணி 2 தொடரில் நடித்து வந்தார். பிரசவத்திற்கு கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு முன்பாகவே சீரியலில் இருந்து விலகினார். பிரசவம் முடிந்ததும் மீண்டும் தொடரில் இணைந்து கொள்வேன் என கூறியிருந்தார். தற்போது ஆலியாவிற்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆலியா தற்போது குழந்தையை கவனிப்பதில் பிஸியாக இருக்கிறார்.
‘பாக்கியலட்சுமி’ சீரியலில் புதிய ட்விஸ்டு – போலியான குடும்பத்தை உருவாக்கி ராதிகாவை ஏமாற்றும் கோபி?
இதற்காக சீரியலில் இருந்து சில மாதங்கள் விலகியுள்ளார். ஆலியா மீண்டும் எப்போது சீரியலில் இணைவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். அவ்வப்போது தனது குட்டி மகன் அர்ஷ்சுடன் இருக்கும்படியான வீடியோவை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அர்ஷ் வீட்டிற்கு வந்த பிறகு ஐலா பாப்பாவும் அதிகமாக குறும்பு செய்ய ஆரம்பித்து விட்டார். இருவரையும் ஒரே நேரத்தில் சமாளிக்க முடியாமல் ஆலியா கதறி கொண்டிருக்கிறார்.