நாடு முழுவதும் மார்ச் 21 முதல் மீண்டும் முழு ஊரடங்கு? அரசு எடுக்கப்போகும் முடிவு!
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. ஆனால் அண்டை நாடான சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதே போல் ஆஸ்திரியாவிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
முழு ஊரடங்கு:
சீனாவில் முதன் முதலில் கடந்த 2019ம் ஆண்டு வுகான் நகரில் கொரோனா வைரஸ் என்ற பெருந்தொற்று கண்டறியப்பட்டது. இது உலகில் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக பல்வேறு தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனாலும் இந்த வைரஸை முழுவதுமாக அழிக்க முடிவதில்லை. ஏனெனில் கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து மிகவும் வேகமாக பரவுகிறது. குறிப்பாக கொரோனா வைரஸின் உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவியது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – நிதித்துறை அமைச்சர் பதில்!
தற்போது ஒரு சில நாடுகளில் கொரோனா தொற்று குறைந்தாலும் கொரோனாவின் பிறப்பிடமாக சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த சாங்சுன், ஷாங்காய், ஜிலின் உள்ளிட்ட நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதே போல் ஐரோப்பிய நாடுகளான நெதர்லாந்து, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக ஆஸ்திரியாவில் ஒரு நாளைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு – ஆர்ஜித சேவை டிக்கெட்கள் வெளியீடு!
அதனால் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. இதையடுத்து கொரோனா பரிசோதனைகளை அரசு அதிகமாக்கியுள்ளது. அத்துடன் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த உள்ளதாக ஆஸ்திரியா அரசு ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளது. மேலும் பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்டவை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தபட்டுள்ளார்கள்.