உச்சம் தொடும் கொரோனா, மீண்டும் ஊரடங்கு? பொதுமக்கள் அதிர்ச்சி!
பிரான்ஸ் நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் புத்தாண்டுக்கு பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.
முழு ஊரடங்கு:
சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் தற்போது அடுத்த தாக்குதலாக கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் தொற்று வேகமெடுத்து பரவி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மூக்கடைப்பு, வறட்டு இருமல் மற்றும் உடல் வலி ஆகியவை ஓமிக்ரான் பதிப்புகளாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று தென் ஆப்பிரிக்கா சுகாதார அமைப்பு கூறுகிறது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி – தகுதியுடையோர், தகுதியில்லாதோர் யார்?
ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தவர்களும், கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்தியவர்களும் தொற்று கண்டறியப்பட்டு வருவது பொது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அனைத்து நாடுகளும் மீண்டும் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் பாதிப்புகள் அதிகரித்து வரும் நெதர்லாந்து நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் மக்கள் கூட்டம் கூடாத வகையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை (டிச.27) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அதனை தொடர்ந்து இஸ்ரேல், இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டிலும் கொரோனா மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1, 4, 611 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும், 84 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு தினசரி கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மீண்டும் முழு ஊரடங்கு விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்து வருகிறது. புத்தாண்டுக்கு பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.